எங்கிருந்தாலும் வாழ்க

அன்று
என் உயிரானவளே
இன்று
என் கழுத்தில்
தூக்கு கயிரானவளே

நீ மறுத்தாலும்
மறைத்தாலும்
என் காதல்
உன்னோடு தான்

நான்
இருந்தாலும்
இறந்தாலும்
உன் நினைவு
என் கண்ணோடு தான்

உனக்காகவே வாழும்
இதயம் உனை விட்டு பிரிந்தாலும்
உன்னை நினைத்தே இயங்கும்

உன் பிரிவால்
என் உயிரும் ஓர் நாள் அடங்கும்

அச்சமயம் என் ஆத்மா கூட
உனை நினைத்தே செயல்பட தொடங்கும்

என் காதல்
கனவானதால்
என் மனம் கனமானது

ஆனது ஆகட்டும்
போனது போகட்டும்

நான் வாடி நின்றாலும்
உன் மனம் அமைதியில் வாழட்டும்

எங்கிருந்தாலும் வாழ்க..........

எழுதியவர் : அன்புசூரியா (3-May-14, 2:19 pm)
சேர்த்தது : அன்பரசு
பார்வை : 634

சிறந்த கவிதைகள்

மேலே