தவம்

வெண்மலரே அட
உன்னைத்தான்
எழமாட்டாயா..........?
ஓ தவமா.........?
அடடா ஒற்றை காலில்
நெடு நேரம்
தவம்புரியும் வெண்தாடி
சூடிய மலர்முனியே
நீ கேட்கும் வரம் என்ன...........?
ஓ வெண்மையில்
உனை மிஞ்சும்
பாதம் பட உலகு கெஞ்சும்
சிரித்தபடி சாலை
கடக்கும்
மெல்லிடையோடு
தளிர்நடைபோடும்
இருகால் மலரின்
கூந்தல் இருக்கை
வேண்டியோ...........?
ம்ம்ம் புரிகிறது
மலரே