மழலை

உன் ஒற்றை சிரிப்பில்
உடைந்தன என் துன்பங்கள்

நீ அழுகின்ற அழகு
கவிஞரின் வரிகளில் உதிர்ந்த
இசையாய் தோன்றுகிறது.....

நீ கொஞ்சும் சினுங்கல் கூட
இறைவனின் அதிசியங்களில் ஒன்று....

உன் ஒற்றை அழகு
உலகத்தின் அழகைவிட சிறந்தது...

மழலை மொழியில் பேச
மழலையாய் மாறிய என் மனம்.....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (4-Sep-14, 8:22 pm)
Tanglish : mazhalai
பார்வை : 558

மேலே