காதல் களவாட வாடா - மணியன்

என்
கண்களைப் பார்த்துக்
காதலைச் சொல்ல
கலவர மூச்சில்
காணாமல் போகிறாய் . . . .
என்
நெஞ்சில் நுழைந்து
நினைவுகளைக் கிள்ளி
நிம்மதி தொலைத்து
நீயேன் ஓடுகிறாய் . . . .
என்
உறவுப் பாலத்தில்
ஊர்தியாய் மாறி
ஊர்ந்து என்
உணர்வுகளை ஏனடா
உரசிச் செல்கிறாய் . . . .
என்
கனவுத் திரைகளில்
காட்சியாய் விரிந்து
காரிருள் முழுவதும்
கவர்ந்து கொள்கிறாய் . . . .
என்
நெற்றிப் பொட்டில்
நேசம் தடவி
நேரம் தெரியாமல்
நோவு கொடுக்கிறாய் . . . .
என்
பாதங்களைப் பகடையாக்கி
பரமபதம் ஆட
பாதி தூக்கத்தில் எனை
பகர்ந்து இழுக்கிறாய் . . . .
என்
கலியுக மன்னா
கவர்ந்திடும் பேச்சால்
காது மடல் உரசி
கவனம் சிதைக்கிறாய் . . . . .
என்
மலரும் நினைவுகள்
மன்மதக் கனவுகள்
மனதின் நாளங்கள்
முழுவதும் நீயே
மன்றம் அமைக்கிறாய் . . . .
உன்
காதலை என்னிடம்
கண நேரம் சொல்ல
காலமிது காலம்
காதலிக்க வாடா. . . .
கொஞ்சம் களவாடிப் போடா . . . .
*=*=*=*, *=*=*=* *=*=*=*