காதல் வேதாளம்

விழியால் விழி மூட வருவேன் பெண்ணே - நீ
விழி திறந்தால் உன் வழியாய் இருப்பேன் கண்ணே

மூடன், மூர்க்கன் இவன்
இன்று - உனக்காக
வார்த்தைகளை களவாடும்
கள்ளக் கவிஞன்

இதோ -
காலத்தின் கட்டளை
காதலில் நானும் விழுந்தேன்
விழுந்த இடம் உந்தன்
காலடி பெண்ணே

பாதத்தின் பள்ளத்தில்
இடம் கொடுத்த பெண்ணே - உன்
உள்ளத்தின் ஓரத்தில்
இடம் ஒதுக்க கூடாதா

காந்த விழி பார்வையால் என்
கர்வம் கரைத்த பெண்ணே - என்
காதலை ஏற்கமாட்டயா

விகர்மாதிதனுக்கு ஓர் வேதாளம்
உனக்கு நான் - என்
காதலை நீ ஏற்கும் வரை..!!

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (14-Sep-14, 1:44 pm)
Tanglish : kaadhal vethalam
பார்வை : 75

மேலே