பார்வை மறைந்தால் - இராஜ்குமார்

பார்வை மறைந்தால்
====================

அழகிய காட்சி வந்தாலும்
விழிகள் முழுதும் வெறுக்குது

அழுகை துரத்தி நின்றாலும்
மனதை பறித்து பார்க்குது

பிரிவு நொடியில் வாழ்ந்தாலும்
பரிவு கண்ணில் இறக்குது

கவலை கனமாய் இருந்தாலும்
ஏக்கம் எங்கோ நிறையுது

உன்பார்வை கண்முன் மறைந்தாலும்
உணர்வும் உடைந்து உலவுது

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (17-Sep-14, 7:39 am)
பார்வை : 107

மேலே