உனக்காக காத்திருக்கிறது உடல்

உன் சிலையான உடல் கண்டு
சிலை வடிக்குது என் கண்கள்
உன் ஓய்யார நடை கண்டு
ஓவியம் வரையுது என் விரல்கள்.

உன் இடை அழகு கண்டு
இனிமையாய் இருக்குது இதயம்
உன் குரல் கேட்டு
தாளம் போடுகிறது உள்ளம்.

உன் சிரிப்பில் சிதறுகிறது
என் சிந்தனை
உன்னை அனைக்க தோன்றுகிறது
என் உடல் காமம்.

கதை சொல்ல காத்திருக்கிறது
என் படுக்கை அறை
மழலை சத்தம் கேட்க காத்திருக்கிறது
என் செவிகள் இரண்டும்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (15-Jan-15, 1:54 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 83

மேலே