பிரசவ வலி உணர்த்தியது

நீ பிரசவ வலியால்
துடிக்கும் போது
என் பிறப்பின் வலியும்
இப்படிதானா? என்று

என்னை யோசிக்க வைத்தது
என் தாயின் அருமை
அப்போதுதான் தெரிந்தது
அறியாமல் செய்த தவறு என்று.

அழைத்து வந்தேன் என் அன்னையை
முதியோர் இல்லத்தில் இருந்து
செய்த தவறை உணர்ந்து
என்னவளின் பிரசவ வலி உணர்த்தியதால்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (21-Jan-15, 11:24 am)
பார்வை : 325

மேலே