புதைத்தேப் போவாயோ
வானம் பார்த்த
விவசாயியின் காலடியில்
விதைமுத்தாய்
நீர்த்தூரல்!
விழுந்தது
நெல்முத்துமல்ல - மழை
நீர் முத்துமல்ல
அவன் கண்ணீர் முத்து!
மண்ணை முத்தமிட வேண்டிய மழை
கண்ணை முத்தமிட்டதால் சத்தமின்றி
ஒரு இடி ஏழையின் இதயத்தில்!
விதைத்தே காத்திருக்கிறேன் - என்னைப்
புதைத்தேப் போவாயோ இயற்கையே!