உன்னைத்தேடி நான்

உன்னை எடுத்து
உருவம் தரித்து
உணர்வை புதித்து
கனாவாய் விடுத்தேன் !
உருட்டி எடுத்து
அதை உயரப்பிடித்து
ஓர் கருவில் புதைத்து
உலகில் விடுத்தான் !
கரைந்து சென்ற
கனவை நினைத்து
கவலை கொண்டேன்
மருகி நின்றேன் !
காலம் கடந்து
என் நினைவை உருட்டி
ஓர் கருவில் திரட்டி
உலகில் புதைத்தான்!
இப்போது என் நினைவு
தேடுகிறது உன்னை
என் கனவே
நீ எங்கே ??!!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (18-Apr-15, 10:18 pm)
Tanglish : unnaithedi naan
பார்வை : 106

மேலே