காதல் மெழுகு

கண்ணாளன் சிந்தும் வியர்வை மழைச்சொட்டு
விண்நிற்கும் வெய்யோன் குடிக்காமல் –மண்மேல்
விழுந்து விருட்சம் குடிக்கட்டு மென்றே
எழுந்த குடையோ இது.

சோற்றுக் குழைக்குஞ் சுடுவெய்யில் வேளை
காற்றன லாகக் கசிதலை = மாற்ற
நிழல்துணி ஏந்தி நெகிழ்ந்தவள் உள்ளம்
மழையெனப் பெய்யும் முகில்!

ஏழைக் கணவனுக்கு ஏற்ற துணையாக
ஊழியம் செய்தற் குடன்பட்டு –ஊழி
வரையில் உருகும் வரமெடுத்து வாழ்வாய்
கரைகின்ற காதல் மெழுகு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Apr-15, 2:25 am)
Tanglish : kaadhal melugu
பார்வை : 136

மேலே