அவளே அன்னை

தாயின் கருவறையில் உருவானேன் அவளுக்கு பாரமாய்..
ஒரு போதும் அவள் நினைத்ததில்லை என்னை பாரமென்று..
நான் தவழும் வேலையில்..
அவள் வேலைகளை விடுத்து என்னை ரசித்தால்..
நடை பழகும் போது..
அவள் வலி மறந்து என் பின்னால் நடந்தால்..
மனதினுள் பாரம் இருப்பினும் அதை மறைத்து புன்சிரிப்பால்..
என் முகம் மலரசெய்தால்..
ஒரு போதும் அவள் தேவையை சிந்தித்ததில்லை..
என் தேவைகள் அவள் நினைவில் இருந்ததால்..
இப்படியே காலங்கள் உருண்டோடின..
அவள் வயதுடன் என் வயதும் சேர்த்து..
திரும்பி பார்க்கையில் அவள் வெகுதொலைவில்..
நானோ என் மணவாழ்க்கை நோக்கி..
இன்று விஷேசங்களில் மட்டுமே அவளை காணமுடிகிறது..
ஒரு விருந்தாளியை போல..
உதிரம் சிந்தி என் உயிர் காத்த அவளுக்கு..
ஒரு சொட்டு வியர்வை கூட சிந்த தவறிவிட்டேன்..
அருகில் இருக்கையில் அருமை புரியவில்லை..
இன்று உணர்ந்தேன் அவளின் பிரிவால்..
இனி ஒரு ஜென்மம் வேண்டாம் அவளுக்கு கைம்மாறு செய்ய..
போதும் அவள் செய்த தியாகம்..

எழுதியவர் : priyaprakash (10-May-15, 5:14 pm)
Tanglish : avale annai
பார்வை : 101

மேலே