இனி நமக்குள் ஒன்றுமில்லை

இதயம்
சுக்கு நூறாகவில்லை..
உலகம்..
இருண்டுபோகவில்லை..
கால்களுக்கு கீழே
பூமி பிளக்கவில்லை..
கண்களில் கண்ணீர்
துளியேனும் துளிர்க்கவில்லை ..
ஒன்றுமே நடக்கவில்லை..
அவள்
"நமக்குள் இனி ஒன்றுமில்லை"
என்று சொல்லி
நடையைக் கட்டியபோது..
அவள் அப்படித்தான் ..
இன்னொரு பெண்ணுடன்
நான் பேசுவதைப்
பார்க்கும் வரை..!






..

எழுதியவர் : கருணா (21-May-15, 1:43 pm)
பார்வை : 557

சிறந்த கவிதைகள்

மேலே