மாற்றம் நிறைந்த எதிர்காலம்

தோற்கும்போது வரும் அழுகை - உன்
தோல்வியை கரைத்திடாது...
வேதனையில் வாடுவதால் - உந்தன்
கடந்தகாலம் மாறிடாது...
சோகம் என்பதை உன்னுள் புதைப்பதால்
உலகம் உனக்காக பரிவு காட்டாது...
உந்தன் துயரத்தை விட்டு விட்டு,
மாறாத முயற்சியுடன் தொடர்ந்து போராடிடு...
மாற்ற முடியாத கடந்த காலம்
மனதில் நிலைபெறாமல் போகட்டும்...
நீயே முயன்று மாற்றிடு - இனிவரும்
உன்னதமான உன் எதிர்காலத்தை ....!
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
நினைத்தபடி உருவாக்கு உன் எதிர்காலத்தை

எழுதியவர் : ந. வேல்விழி (24-Jun-15, 2:59 pm)
பார்வை : 121

மேலே