எனக்கு நீ சிறப்பானவள்

2011 ல் புதுக் கவிதை
அன்புள்ள அன்னையே,
உன் அறியா வயதில்
உன் முதற் பிள்ளையாய்
என்னைச் சுமந்து பெற்றாயே;
உன் வலி நானறிவேன்.
பல் முளைத்த பருவம் வரை
எனைப் பாலூட்டி வளர்த்த
அன்னையே;
கைம்மாறு என்ன செய்வேன்
காலமெல்லாம் காத்திடுவேன் உன்னையே.
நோயுற்ற காலமெல்லாம்
விழித்திருந்து என்னைச் சீராட்டிய
அன்னையே;
என் இதயம் முழுதும் நிறைந்த உன்னை
வணங்குகிறேன் என் ஆயுள் உள்ளளவும்.
என்றும் எனக்கு நீ சிறப்பானவள்.
2015 ல் மரபுக் கவிதை
எனக்கு நீ சிறப்பானவள் - நேரிசை வெண்பாக்கள்
அன்புள்ள அன்னையே உன்னறி யாவயதில்
உன்முதற் பிள்ளையாய் என்னையே – உன்கருவில்
நீசுமந்து பெற்றாயே; உன்வலி நானறிவேன்.
பேசுவேன் உன்பெருமை நான்! 1
பல்முளைக்கும் நாள்வரை பாலூட் டிவளர்த்தாய்;
தொல்லைகள் நான்கொடுத்தும் தூரப்போ – கொல்லையில்
கட்டிவைப்பேன் என்னாது காத்துவந்தாய் கண்ணாக
அட்டியேதும் உண்டோ அதற்கு! 2