மீண்டெழுவாய் ரத்தினமே

போகும் பாதை
தூரமில்லை ,
வானம் நோக்கி
போட்ட எல்லை ..!

காலம் கூப்பிட
விரைந்து சென்ற - ஓர்
நொடியில்
விழி சிவந்தது நீரலையில் ...

மண்ணில் பிறந்திடு (மீண்டும்)
மண்ணில் பிறந்திடு...

விதி மரியப்போனாலும் - உம்
மதியோ மரிப்பதில்லை ,
விலைமதியா ஒளியே - உம்
கதிர்கள் மறைவதில்லை !
தாய் மடிந்த பிள்ளைப்போல்
உள்குமுறி அழுகின்றோம்
மீண்டெழுவாய் ரத்தினமே ...

கருவில் கருணை
விதை விளைப்பவர்தம்
உலகை
உறவேன்றாரே...!

தடைகள் உடைத்து
வளரும் இளைஞர்களை
அக்கினி சிறகென்றாரே ...!

புதுமை தேடிடுமே...
நேர்மை வாடிடுமே...
எழுந்திடு எழாம் அறிவே...

எழுதியவர் : செல்ல கார்த்திக் (31-Jul-15, 9:21 am)
சேர்த்தது : செல்ல கார்த்திக்
பார்வை : 124

மேலே