உறங்கிய காமராசர் என்ன நினைத்து உருகி இருப்பார்

பள்ளிக்கு கூட செல்லாத நான்
பல பள்ளிகள் திறந்தேன்
காயும் வயிற்றுக்கு சோறு போட்டு
பாடம் சொன்னேன்
கல்வியில் சிறந்த கனவான்களே
அடுக்கு மொழி நாயகர்களே
சாராயக்கடை திறந்து
நாட்டை சீரழித்து விட்டீர்களே!
இதற்காகவா ஒன்பது வருடங்கள்
சிறைவாடி போராடினேன்!
இதற்காகவா உயிரை விட்டனர்
பல புண்ணியவான்கள்!
நான் மட்டும் அன்று உறங்காமல்
காலனுக்கு மறுப்பு சொல்லிருந்தால்
உங்களை ஓட விரட்டியிருப்பேன்
அரசாங்கத்துக்கு நிதி சேர்க்க
பல குடிகளை அழித்த உங்களை
அடையாளம் இல்லாமல் ஆக்கிருப்பேன்.
பொறுத்திரு! நான் வளர்த்த பிள்ளைகள்
வருகிறார்கள் நான் நினைத்ததை
செய்து முடிக்க!

எழுதியவர் : வினோத் (2-Aug-15, 2:25 pm)
பார்வை : 205

மேலே