ஓடம் ஒன்று துடுப்பு தேடுகிறது

காலத்தின் ஓடத்தில்
கரைசேர
என்ன வேண்டும் துடுப்பாய்..
நேர்மை வேண்டுமா
பைத்தியம் என்பார்கள்..
கருணை வேண்டுமா
ஏமாளி என்பார்கள்..
பக்தி வேண்டுமா
கையாலாகாதவன் என்பார்கள்..
பாசம் வேண்டுமா
வேஷம் என்பார்கள் ..
அதிகாரம் வேண்டுமா
ஆபத்து என்பார்கள் ..
அறிவுரை வேண்டுமா
ஆளுக்கொன்று சொல்வார்கள்..
திரும்பி பார்க்கிறேன் என் வாழ்வை..
நான் இல்லா என் வாழ்வில்
ஆதிக்கம் செலுத்துவது அன்னியர் மட்டுமே..
என்ன இது!
மற்றவர்களை எண்ணி எண்ணி
இழந்துவிட்டேன்
உற்ற தனித்துவத்தை..

எழுதியவர் : தீபாகுமரேசன் (11-Aug-15, 8:12 pm)
பார்வை : 469

மேலே