திருமணம் திருத்தியது என்னை

திருமணம் செய்து கொண்டேன்
திருநதியே வாழ் நினைத்து
திருப்தியாய் வாழ்கிறேன் நான்
தினம் தினம் என்னவளோடு..

தோழியாய் வந்தாய் நீ
என் தோளோடு சாய்ந்த படி
இனி தொந்தரவு செய்யாதே.
தொலைந்து விடும் என் வாழ்க்கை அம்மா..

என்னவளுக்காக வாழ்கிறேன் இன்று
என் எண்ணம் எல்லாம் அவளோடு
மட்டும் இன்று..என்னவளும் சொல்கிறாள்
என் புருஷன் எனக்கு மட்டும் தான் என்று..

என்றென்றும் அவளோடு மட்டுமே
வாழ்ந்து விடுகிறேன்..என் எண்ணமும்
அவள் எண்ணமும் ஒன்று சேர
நான் இப்போது திருமணம் ஆனவன் அம்மா.

தோழியாய் தோல் கொடுத்தாய்
நன்றியோடு விடை பெறுகிறேன்
நான் என்னவளோடு வாழ நினைத்து
நீ ஒதுங்கியே போய் விடு..

ஓர் ஆயிரம் நன்றி சொல்லி
என்னவளோடு நான் வாழ
உன்னை விட்டு பிரிகிறேன் இன்று
மனதார வாழ்த்தி விடு என்னை நீ..

நீ மங்கலம்மாய் வாழ்ந்து வீடு
மனதார வாழ்த்துகிறேன் உன்னை
மறந்து விடு என்னை நீ
மனம் விட்டு சொல்லி விட்டேன்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (2-Sep-15, 12:40 pm)
பார்வை : 87

மேலே