குளிர்ந்த நீர்போல் இருக்கிறது
நிழலின் கீழ் இருக்கும் -நீர்
குளிர்ந்த தண்ணீராகும் ....
பருக பருக இன்பம் தான் ....!!!
என்னவனே ....
அன்புகொண்ட உன் கூடல் ....
குளிர்ந்த நீர்போல் இருக்கிறது ....
பருக பருக இன்பம் தான் ...!!!
+
குறள் 1309
+
புலவி.
+
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 229