காதணி கதைகள்

அமர்ந்து பேச உதிர்ந்த சொற்கள்
முறிந்துப்போன கிளையாய் விழ
அதிர்ந்து போன இதயம் எனதும்
உணர்ந்து நொந்தது ஒரு நிமிடம்,
நீ நிலவொளி புல்வெளியில்
பனித்துளியால் மின்னும் ஒளி - எனும்
காதணி கதைகள் அறியா
காதலில் கவிதைகள் வரைந்தேனே.

‪#‎காதணிகதைகள்‬ ‪#‎காதல்‬ ‪#‎ஏமாற்றம்‬
‪#‎எழுத்தோலை‬!

எழுதியவர் : எழுத்தோலை (13-Sep-15, 8:07 pm)
பார்வை : 358

மேலே