காதணி கதைகள்
அமர்ந்து பேச உதிர்ந்த சொற்கள்
முறிந்துப்போன கிளையாய் விழ
அதிர்ந்து போன இதயம் எனதும்
உணர்ந்து நொந்தது ஒரு நிமிடம்,
நீ நிலவொளி புல்வெளியில்
பனித்துளியால் மின்னும் ஒளி - எனும்
காதணி கதைகள் அறியா
காதலில் கவிதைகள் வரைந்தேனே.
#காதணிகதைகள் #காதல் #ஏமாற்றம்
#எழுத்தோலை!