உனக்கு நீதான் உன்னதமானவன் 555

தோழா...

காலம் பொன்னானது அதில்
கவனமாக இருக்க வேண்டும்...

ஒவ்வொரு நிமிடமும் உன்னதமானது
என்று நீ உணரவேண்டும்...

வசந்தம் உன்னை
தேடிவரும் என்று நினைக்காதே...

இரவு நேர உறக்கமும்
பொன்னானதுதான்...

உன் சிந்தனையின் சிறப்பில்
லட்சிய கனவுகள் வந்தால்...

வாழும் போதே வாழ்ந்துவிடு
வாழக்கையை...

உன்னைப்போல் உன்னதமானவன்
யாரும் இல்லை என்று நினைத்துகொள்...

உண்மை வெளிவரும் வரை
நீ உழைத்துகொண்டேயிறு...

உழைப்பதில் மட்டும்
உன்னை ஈடுபடுத்திகொள்...

நீயும் வானுயர்ந்து நிற்பாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Dec-15, 7:36 pm)
பார்வை : 304

மேலே