வாழ்வியற் குறட்டாழிசை - 14 கேட்டறிதல்

வாழ்வியற் குறட்டாழிசை
கேட்டறிதல் 14.
கூட்டறிவின் ஒரு பகுதி அறிவுடன்
கேட்டறியும் செவிச் செல்வம்.
பார்த்தறிதல், படித்தறிதல் போன்று உலகில்
கேட்டறிதலும் பெரும் செல்வமே.
கேட்டதும் கெட்டதை உடன் மற!
கேட்ட நல்லதோடு தொடர்.
நல்லதைக் கேட்டு பிறருக்கும் தெரிவி!
சொல்வதால் உயர்வாய்! கீழாகாய்!
பெரியோர் வாய் மொழிகள் கேட்டு
உரிய வழியில் செல்லலாம்.
நூலறிவு இல்லாவிடிலும் கேட்ட அறிவு
மேலுயரப் பயனாகும் நல்லவனிற்கு.
பொல்லாத ஊனக்காரர் சிலர் புவியில்
நல்லனவற்றைப் பிறருக்குக் கூறார்.
விட்டு விலகி எதிரியாகாது, பார்த்தும்
கேட்டும் பழகுதல் நட்பு.
வயிற்றிற்கு உணவு, கண்ணிற்குக் காட்சி
செவிக்குக் கேட்டலும் பூரணம்.
கேட்கும் கேள்விகளால் தெளிவு பிறக்கும்.
வாட்டும் ஐயப்பாடு விலகும்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
17-9-2011.