நகரும் பொழுதுகள்

நகராமல் நகர்கிறது
இரவு..
நாட்களுடன்
போராடிப்
பருவகாலங்களைச்
சுவீகரித்து
ஓயாமல் நீரைத்
தேக்கி வைத்த
குளிர் மேகத்தின்
ஈர உதடு
முகில் தாண்டித்
தூவும்
பனித்துளியின் சந்தம்
உறைந்துகிடக்கும்
மரங்களை ஊடறுக்கும்
காற்றில் கரைந்து
சாளரத்தில் கரையும்.
காற்றில்
பட படைக்கும்
புத்தகத்தின்
படித்து முடித்த
குளிரான பக்கங்களின்
கோடிடப்பட்ட
ஞாபகங்களை
அசைபோட்டபடி
இன்னும்
தூங்காமல் விழித்துக்
கொண்டிருக்கிறது
இந்த இரவு
அங்கே
அழகிய தேநீர்க் குவளை
ஒன்றில் அதன்
ஞாபகங்களுடன்
ஓர் காலை மலர்ந்திருப்பது
புரியாமலே...

எழுதியவர் : சிவநாதன் (5-Jan-16, 12:04 pm)
Tanglish : nagarum poluthukal
பார்வை : 86

மேலே