தன்னம்பிக்கை வை- லத்தீப் நாகூர்

கண்ணீர் எதற்கு
கரைபுரண்டோடும் நதி
இருக்கையிலே.........!

கவலை
எதற்கு உலகம்
மிக சிறியதா
இல்லை - நீ மலை
போலே உறுதியாக
இருக்கையிலே........!

தைரியம்
உனதருகே நீயோ
பயத்தின்
உச்சியில்
அமருகிறாய்-துறந்துவிடு
துணிவு
இருக்கையிலே.......!

மண்ணின்
மைந்தனடா
மார்தட்டிக்கொள்
கவலை எதற்கு
பணிவு கோலையாகாது
உறுதியாக
இருக்கையிலே.........!

நாள்
கடந்தது
நேரம் புரண்டது
போனது
வருமா.....?

நிகழ் காலம்
உந்தன் அருகிலே
நம்பிக்கோடு நீ
இருக்கையிலே........!

எழுதியவர் : latif (16-Jan-16, 4:11 pm)
பார்வை : 90

மேலே