கண்ணாடி முன் நில்லுங்கள்

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள்
மட்டும் தெரிவார்கள்.....!!!

தோல்வியின் அடையாளம்
தயக்கம்....!!!
வெற்றியின் அடையாளம்
துணிச்சல்....!!!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!

கையில் ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இன்னொரு ரோஜாக்களைக்
காண்பீர்கள்....
அது நீ ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Feb-16, 3:35 pm)
பார்வை : 81

மேலே