மனிதன் மனிதனாக
நாய் ஒன்று குறைக்கிறது
தெரு முனையிலே
இடைவிடாமல் எதற்கோ
தெரியவில்லை.
நாய் தானே என்று நடக்கிறோம்
திரும்பிப் பாராமல்
அதுவும் ஓர் உயிர் என்று
நினையாமல்.
அந்த மெத்தனம் ஏனோ
புரியவில்லை
அசட்டையாக இருப்பது
நியாயமே இல்லை .
நாய் என்று ஒதுக்குவது
சரியில்லை
உயிர் என்று மதிப்பது
நியமம் கூட
இதற்கு காரணங்கள் கண்டு
பிடிக்க முடியவில்லை
ஏனோ
மனிதன் மனிதனாக
நிறைவு பெறவில்லை