நான் நீ
![](https://eluthu.com/images/loading.gif)
மாதுளம் பூவாய்
மகளிர் கூட்டத்தில்
நீ...!
சோடியம் விளக்கில்
நனையும் உருவமாய்
நான்...!
வரப்பு இடித்து
எலிவளை பறித்து
எடுத்த கதிர்களில்
வடித்த சோறாய்
சிரித்தாய் நீ...!
அந்த -
கிலுகிலுப் ஓசையில்
கிரங்கிக் கிடந்து...
அழுகை விடுத்த
குழந்தையாய் நான்...!
அருளும் மானாய்
மருளும் விழிதனில்
உருளும் திராட்சை
மெருகாய் நீ...!
தீபம் ஏந்தி -
யாத்திரை வந்து
தெருவினில் தெளித்த
பௌர்ணமி வெளிச்சத்தில்
விட்டிலாய் நான்...!
நான் -
மார்கழி...
குளிருக்குப் பயந்து
போர்வைக்குள் -
போர்வையாய்
புதைந்திருந்த பொழுது,
எங்கோ கேட்கும்
ஏற்றப் பாட்டில்...
முகத்தைக் காட்டி
மூச்சுக் காற்றை
முட்டச் செய்வாய் நீ...