மனம் வலிக்க

கணவனும் மனைவியும்
அடித்துக் கொண்டார்கள்
தினமும் எந்நாளும்

ஒரு முறை அல்ல
ஒவ்வொரு நாளும்
வேளையும் எப்போதும்

எதற்கு எனின்
ஒரு காரணம் அல்ல
பலப் பல எவ்விதமும் .

பற்பசை முதல் படுக்கை
வரை பலப்ப்ரிட்சை என
ஏச்சும் பேச்சும் யாவற்றிலும் .

கணவன் பிடித்தால்
ஒரே பிடி மனைவியோ
சுற்றி வளைத்தல் எவ்வகையிலும்.

முடிவே இல்லையா என்று
மனம் வலிக்க எண்ண
விடிவே இல்லையா எக்காலமும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (4-Apr-16, 4:53 pm)
Tanglish : manam valikka
பார்வை : 3682

மேலே