தரிசனம்

இன்று
ராம நவமியாம்..
காலையிலேயே
தரிசனம் கிடைத்தது..
சாலையோர அசோகமரத்தில்
இரு லவகுசப் பட்சிகளை
தன் சீதைக்கு
சுட்டிக் காட்டியபடி
சூரியோதய வேளையில்
அவள் அமர்ந்திருக்கும்
சக்கர நாற்காலியை
உந்திக் கொண்டே
காலை நடை
போய்க் கொண்டிருந்தார்
அந்த எண்பத்தைந்து வயது
ரகுராமன்..

எழுதியவர் : ஜி ராஜன் (15-Apr-16, 7:55 pm)
Tanglish : tharisanam
பார்வை : 75

மேலே