வர்ணம் பூசிய வாழ்க்கையடா

ஆசையெனும் வர்ணம் பூசி
காத்திருக்கிறது வாலிபம்

கனவுகளில் வர்ணம் பூசி
சிறகடிக்கிறது இதயம்

மௌனமெனும் வர்ணம் பூசி
இம்சிக்கிறது சம்மதம்

வாழ்க்கை என்னும் சுவர்மீது
கல்யாணம் என்னும் வர்ணம்பூச
உன் வருகைதானே தூரிகை .

எதிர்பார்ப்பென்னும் வாளிகளில்
எதிர்காலங்களுக்கான
வருணங்களை நிரப்பிவைத்து
தவமிருக்கிறேன் .

நான் ஓவியமாவதும்
காவியமாவதும்
உன் தூரிகையின் கைகளில்..

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Apr-16, 1:59 am)
பார்வை : 226

மேலே