மற்றுதிரனாளி

மாசற்ற மாணிக்கமே.!!!
மருத்துவத்தை மிஞ்சிய அருமருந்தே...
என் பசியின்மை
உறக்கமின்மை
செவிடு குருடு என
பல வியாதிக்கும்
மருந்தானவளே....
இன்றேன் விழிக்கு விருந்தானவளே...
உறக்கம் தந்து
கனவிற்கு மடிதந்தவளே...
மறதிக்கு சொந்தக்காரனாய்
மனிதகுலத்தில் பிறந்தேனே...
இன்று உனைத்தவிர்த்து
அனைத்தும் மறந்தேனே...
அங்கமெல்லாம் நார்நாராய்
கிழிந்து உயிர்துறக்கும்
நிலை வந்தாலும்
அகமெல்லாம் உனைநினைத்து
விழிதிறந்தே உயிர்த்துரப்பேன்....
மனமெல்லாம் நிறைந்தவளே...
முழுமதியாய்
வாசல் வந்தவளே...
மரணம் கூட
பெறிதில்லை எனக்கு!!!
உனைக்காணாத நாளெல்லாம்
சூன்யமாய் போகுதடி
மற்றுதிரனாளியாய்
வாசல் வந்து கிடக்கிறேன்.!!!.
திறன்தந்தெனக்கு
துணையாய் வருவாயா....

எழுதியவர் : கருப்பசாமி (30-Apr-16, 10:02 am)
பார்வை : 95

மேலே