கல்நெஞ்சக்காரி

பறவை ஒன்று,
பிரிந்து சென்று,
வருடம் ஒன்று,
ஆனது,


துடிக்குது மனம்,
நினைக்குது தினம்,


காணும் இடமெங்கும் அவளின் முகம்,
தேனும் விடமென மாறிய பாகம்,


மயிலும் அங்கே அகவிய இசையும்,
குயிலும் இங்கே கூவிய கூவலும்,


உனக்குக் கேட்கலையோ,
உனது மனம்தானென்னை நினைவு படுத்தலையோ...


சதைப் பிண்டத்தின் நெஞ்சம்தான் கல்லோ,
அதைச் சுமக்கும் நீயுமொறு உயிரோ,...

கல்நெஞ்சக்காரி...

எழுதியவர் : வெண்தேர்ச்செழியன் (2-May-16, 9:20 pm)
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே