அணிலெனும் அன்பு

முகட்டின் மேல் காற்றுக்கு உரசுகிறதென்று
கிளையை வெட்டிவிட்டேன்.
கிளையிலிருந்து ஓட்டுக்குத்தாவமுடியாத அணிலொன்று
தூரமாய்
போய்விட்டது வீடென்று
துக்கமாய் கிறீச்சிட்டது.
இடைவெளி விடாத
அக்குரலின் துயரம்
என் வீட்டையே
சுமந்தபடியிருந்தது.

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (15-May-16, 12:49 pm)
பார்வை : 188

மேலே