மௌனிக்காதே பெண்ணே………………

ஒரு மாதம் மௌனமாய் இருந்து விட்டு
ஒன்றுமே நடக்காதது போல் இன்று பேசுகிறாய்..

கேட்டால் வீட்டில் சிறைவாசம் என்கிறாய்..
சிறைவாசம் எனக்கும் தானே உன் இதய சிறையில்..

உன்னை நேரில் காண முடியாவிட்டாலும்
உன் குறுஞ்செய்தியால் உன்னை அடைகிறேன்..

உன் மௌனத்தால் மட்டுமே மீளாத்துயரில்
கரையேர முடியாமல் தத்தளிக்கிறேன்…

காதலில் மௌனம் சம்மதம்…
காதலித்தபின் மௌனம் சங்கடம்..

மௌனிக்காதே பெண்ணே………………

எழுதியவர் : ஜெய் ரெட்டி (28-Jun-16, 5:05 pm)
பார்வை : 135

மேலே