வேண்டுதல்…
குலமது காக்கும் சாமியென்றே
கும்பிட வைத்தார் முன்னோர்கள்,
நிலமதன் வருவாய் குறைந்ததாலே
நகரை நாடினர் கிராமத்தார்,
உலகைக் காப்பது கிராமமென்ற
உண்மையை உணர வைத்திடுவீர்
சிலையாய் நிற்கும் சாமிகளே
சிதைந்த நீவிரும் சீர்பெறவே…!
குலமது காக்கும் சாமியென்றே
கும்பிட வைத்தார் முன்னோர்கள்,
நிலமதன் வருவாய் குறைந்ததாலே
நகரை நாடினர் கிராமத்தார்,
உலகைக் காப்பது கிராமமென்ற
உண்மையை உணர வைத்திடுவீர்
சிலையாய் நிற்கும் சாமிகளே
சிதைந்த நீவிரும் சீர்பெறவே…!