எப்படி உன்னை?
இதிகாசங்கள்
இயற்றப் பட்டு விட்டன
அரியாசனமே ...
காவியங்கள்
கதைக்கப் பட்டு விட்டன
கோபுர தீபமே...
பாடல்கள்
பாடி ஆகி விட்டன
பரிபூரணமே..
கவிதைகள்
அறியப் பட்டு விட்டன
நிதர்சனமே...
எப்படி உன்னை
எழுத்துக்குள்
படம் பிடிப்பேன்
என் கன்னித் தமிழே...!
பிஞ்சு இதழ்களுள்
முல்லைப் பற்களால்
இந்தப் பிள்ளைத் தமிழ்
ஓர் அன்னையை
ஆராட்டித் தாலாட்டுமா?