புதிர்
![](https://eluthu.com/images/loading.gif)
மாலைச் சூரியன்
மரங்களில்
மஞ்சள் பூசியது....!
வயல் காற்று
சுகந்த வாசனையுடன்
இனிமையாக வீசியது....!
இருள் சுழவே
வானத்து பறவைகள்
பேரணி நடத்தின....!
காலத்தின் கட்டாயம்.!
நதிக்கரை ஓரத்தில்
அவன் வருவான் என்று
இன்னும் அவள்
காத்திருக்கின்றாள்....!
காதலின் புதிரை புரியாதவளாய்....!