ஈழத்தின் குமுறல்

ஈழம்

உலகம் எனும் தாயின்
கருவறையில் முதலாவது பிரசவமான
தமிழ் மைந்தர்களுக்கு தீண்டாமை
எனும் தண்டனையா
விடிய வில்லை
விதியின் செயலா தண்டிப்பது
தன்னலம் கொண்ட வீணர்களின்
அரசியல் செயலா
இறைவா இவர்களை காக்க
உன்னை தவிர நான் யாரை
அழைப்பேன் !

இந்நிலத்தில் பிறந்தோம்
இங்கயே வளர்ந்தோம்
இனிமையாய் இருந்தோம்
இடையில் வந்த நீ யாரடா
எங்களை விரட்ட .......

உயிருக்கு இல்லை
உத்திரவாதம் அழுது புலம்பும்
எங்கள் கண்ணீர் துடைக்க
தனிப்படை அமைத்த வீரனும் இத்
தரணியில் இல்லை .....

மாதர் குலத்தின் மார்பை அறுக்கும்
நீயும் அன்னை தங்கை அறியாத
மனித பிறவியா
மனித போர்வையில் அலையும்
மிருகமே நீ செய்யும்
இச்செயலை கண்டால் உன் தாயும்
உனை வெறுப்பால் உணர்வாய்
உண்மை இதை .........

பழி வாங்கும் செயலுக்கு
பாசமுள்ள பண்புள்ள
பாண்டிய மைந்தர்களா கிடைத்தோம்
பார்த்து கொண்டே இருங்கள்
பாரில் தனி ஈழமாய் வெல்வோம்
விரைவில் !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (23-Aug-16, 9:31 am)
Tanglish : eezhathin kumural
பார்வை : 52

மேலே