கவிதை 118 முகநூலில் வளர்ந்த காதல்

முகநூலில் இணைந்த உள்ளம்
முகமறியாது நாளும் வளர்ந்ததுவே
பேசியதாலே வந்த காதல்
பழகியதும் குறைந்து போனதுவே

அன்பினாலே வடிக்கும் கண்ணீரும்
கலக்கத்தை குறைக்க மறுத்தனவே
அனுபவத்திலே அறிந்த பாடமும்
குழப்பத்திலே மறந்து விட்டதுவே

இன்பத்திலே மகிழ்ந்த உள்ளமும்
துன்பத்திலே வாடி உருகுகிறதே
சேர்ந்ததால் வளர்ந்த அன்பு
பிரிந்ததால் கரைந்து மறைந்ததுவே

தூக்கத்திலே மறந்த நினைவும்
கண்ணீரில் கலந்து சென்றதுவே
ஏக்கத்திலே வாழும் இதயம்
சோகத்திலே வீழ்ந்து துடித்தனவே

பாசத்திலே வளர்ந்த உறவும்
காலத்திலே பிரிந்து நின்றனவே
ஏமாற்றத்திலே தளர்ந்த மெய்யும்
தனிமையிலே உருகி வாடுதுவே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (27-Aug-16, 8:57 pm)
பார்வை : 52

மேலே