அன்பே சிவம்
பொருளுக்காக பாடுவதில்லை...
புகழ்ச்சிக்காக பாடுவதில்லை...
மனதில் உள்ளதை
மக்களுக்கு எடுத்துச் சொல்லவே
நல்லதை உலகிற்கு சொல்லவே
பாடுகிறேன்.....
எனக்கு பேரும் புகழும் தேவையில்லை...
மக்களின் வாழ்வில் என் கவிதை
வழி துணையாய் நின்றாலே போதும்...
உங்கள் அன்பு அது போதும்
அது உலகிலேயே மிகப் பெரியது
என்னாளும்
உங்களின் அன்பில் தான் பாடுகிறேன்...
உயிர்களிடத்தில் அன்பை பகிருங்கள்
#அன்பிற்கும் #உண்டோ #அடைக்கும் #தாழ்?
#அதற்கு #ஈடும் #உலகில் #உண்டோ?
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து