வெள்ளொத்தாழிசை - இயற்கையின் அழகு - மரங்களே சான்று

காலைக் கதிரவன் காண்கின்றான் நம்மையெல்லாம்
மாலை மயங்கி மதியழகி நோக்கிடவே
சாலை மரங்களே சான்று .

பாலை நிலத்தினிலும் பாசமுடன் நாள்தோறும்
காலை அழகினையும் காண இயற்கையின்
சாலை மரங்களே சான்று .

ஆலைக் கழிவுகளை அப்படியே விட்டுவிட்டால்
சோலை மலர்களும் சோர்ந்துவி டாதிருக்க
சாலை மரங்களே சான்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Sep-16, 10:49 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 191

மேலே