கனவுகளின் நாயகன்

அக்கினியை எழுதினாய்
அக்கினியாய் செயல்பட்டு
வானத்தை வீழ்த்தினாய்

உன்னை அறியாத சிறுவனில்லை
உன் புகழ் பாரினில் போற்றும்
என்பதில் ஐயமில்லை

கனவுகளின் நாயகன்
எளிமையின் நாயகன்
என்ற பெயரை தாண்டி
குழந்தைகளின் நாயகனாய் விளங்கினாய்

நீ எட்டாத உயரமில்லை
உன்னால் முடியாதது எதுவுமில்லை

நீ கண்ட கனவு
எங்களை உறங்க விடாமல் செய்தது
இருபதாம் நூற்றாண்டில்
இணையற்ற வல்லரசு இந்தியா .

எழுதியவர் : முல்லைராஜன் தமிழ் அமுதன் (14-Oct-16, 9:04 pm)
பார்வை : 345

மேலே