சாகாமல் இருந்தால் வருகிறேனடி நான் 555

என்னுயிரே...

நீ என்னுடன் கோபம்
கொள்ளும் ஒவ்வொரு நொடியும்...

எனக்கு சோகம் என்றாலும்
சந்தோஷம்தாண்டி எனக்கு...

காலையில் கோபம் என்றால்
மாலையில் பேசுவாய்...

மாலையில் கோபம் என்றால்
இரவில் பேசுவாய்...

நீயாக பேசும்போதுதான் என்னுடன்
அதிகம் பேசுகிறாய் நீ...

ஏனோ காரணமின்றி
கோபம் கொண்டாய்...

என்னையும் தவிக்கவிட்டு
பிரிந்தாய்...

என்னையே அறியாமல் நான்
தவறு செய்திருந்தால்...

நீ குறைகளை
சொல்லி திருத்திருக்கலாம்...

என்னைக்கான வருவாய்
என்று காத்திருந்தேன்...

உன்னிடமிருந்து வந்தது அழைப்பிதழ்
உன் திருமணத்திற்கு...

எப்படி நீ எளிதாக
என்னை நினைத்தாய்...

நான் திருமணத்திற்கு
வருவேன் என்று...

உன்னுடன் நான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்...

எவனோ ஒருவனாக
எப்படி முடியும் சொல்லடி...

உன் திருமணம்வரை என்
இதயத்துடிப்பு நிற்காமல் இருந்தால்...

உன்னை வாழ்த்த
வருகிறேன் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Nov-16, 8:16 pm)
பார்வை : 746

மேலே