எத்தனை கால்கள்

பிள்ளைப் பருவத்திலே
பொடிநடைதான் நாலுகாலில்..

பெரியவரான பின்னே மனிதன்
போடும் நடை இருகாலில்..

முதுமையில் வந்தது
ஊன்றுகோலொடு மூன்றுகால்..

படுத்ததும் பாடையில்,
பற்றித் தூக்கிச்செல்கையில்
இருநான்கு கால்கள்..

காலத்தின் கால்களுக்குக்
கட்டுப்பாடே இல்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Nov-16, 7:32 am)
பார்வை : 61

மேலே