தண்ணி அள்ளப் போறவளே

ஆத்தங்கர ஓரத்துல...
அந்தி சாயும் நேரத்துல...
தண்ணியள்ள போரவளே...
உன் கண்ணிரண்ட தாடி புள்ள...

அந்த கொடத்துக்கு குடுத்த இடமத...
என் வெரலுக்கும் குடுடி தடவிட...
உன் விழியது பொழியிற காதல...
உன் ஒதட்டுல ஏன் இன்னும் காணல...

உன் முடியில சொருவுன மல்லிக...
இந்த பொடியன இழுக்குது வள்ளியே..
உன் நெனப்புல வாழுறன் கள்ளியே...
பயத்துல இருக்கன் தள்ளியே...

உன் நடையில வளையுற இடையில...
நான் ஒடஞ்சுதான் விழுந்துட்டன் வலையில...
நீ சிரிச்சதும் பொடியன்ட மனசுல...
ஒரு காத்துத்தான் வீசுது தினுசுல...

எழுதியவர் : முகமட் நஷீம் (24-Jan-17, 12:42 am)
சேர்த்தது : Nazeem
பார்வை : 96

மேலே