எத்தனை அற்புதம்

பசுமை நிறைந்த
நிலங்கள் !
அமைதி பேசும்
காற்று !
எட்டா தூரம்வரை
சமுத்திரம் !
கதை சொல்லும்
அலைகள் !
எத்தனை அற்புதம்
உன் படைப்பில் !
உயிருக்குள் உயிரை
சுமக்கும் பெண் !
ஈ்ருயிரை காக்க
போராடும் ஆண் !
எத்தனை அற்புதம்
உன் படைப்பில் !
எல்லாம் படைத்தாய்
சரியாய் !
எல்லாமும் இருந்தது
சரியாய் !
பின் ஏனிந்த
மாற்றம் !
ஏன் இந்த
சீரழிவு !
ஏன் இந்த
அவல நிலை !
எந்த அற்புதம்
நிகழ்த்தவோ இத்தனயும் !