மூங்கில்
வளையும் மூங்கிலை எடுத்தான்
கூடை பின்னினான் கட்டில் செய்தான்
தொட்டில் செய்தான் ஊஞ்சல் செய்தான் !
வளையாத மூங்கிலை எடுத்தான்
பந்தல் கால்கள் நட எடுத்துச் சென்றான்
கூரை வேய குறுக்கு கம்பாக்கினான் !
எங்கிருந்தோ வந்தான்
இடைச் சிறுவன் நான் என்றான்
என் பெயர் கண்ணன் என்றான் !
வளையாத மூங்கிலை எடுத்தான்
ஏழு துளை செய்தான்
இதழ் குவித்தான் விரல் பதித்தான்
கீதம் இசைத்தான் !