நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
என் இதயத்திற்கும் தெரியும்
உன் இதயத்திற்கும் தெரியும்
நம் பாதைகள் பிரிந்தன
நாம் பிரியவில்லை என்று...
உன் நினைவில் நான்
என் நினைவில் நீ
சேர்ந்தே வாழ்கிறோம் கற்பனையில்...
அன்று இருந்த மகிழ்ச்சி இன்று நம்மிடம் வர மறுக்கிறது...
இன்று இருக்கும் துக்கம் நம்மை விட்டு போக மறுக்கிறது...
கண்களில் வரும் கண்ணீரும்
நெருப்பை உமிழ்கிறது...
காலங்கள் மாறின
காயங்கள் மாறவில்லை
ஆழமான காயமல்லவோ?!?!
ஆழமான காதலல்லவோ?!?!
வெகு தூரம் சென்றாலும்
மிக சமீபமாய் நீயே தெரிகிறாய்...
மறக்க தோன்றவில்லை ஆனால்
நினைவுகளை நினைக்க மறுக்கிறேன்,
அதில் தோற்றும் போகிறேன்..
அங்கே நீயும் தவிப்பதை உணர்கிறேன்...
ஏனெனில்,
என் இதயத்திற்கும் தெரியும்
உன் இதயத்திற்கும் தெரியும்
நம் பாதைகள் பிரிந்தன
நாம் பிரியவில்லை என்று...
-என்றும் அன்புடன் ஷாகி