பிதற்றல்
![](https://eluthu.com/images/loading.gif)
புரையோடிக் கிடக்கும்
நாவுகளில்
மிஞ்சியிருக்கும்
வார்த்தைகளை
தேடுகிறேன்....
குறிக்கோள்களற்ற
வெற்று வார்த்தைகளில்
மனதின் மதில்கள்
சரிந்து
விழுகிறது ....
ஒற்றைப்பிராணியாய்
தெருவில்
பிதற்றியபடி
அலைகிறேன்....
மிஞ்சியுள்ள
வார்த்தைகளும்
தற்போது
உபயோகத்தில்
இல்லை....
...கௌசல்யா.....